தமிழ்நாட்டில் 3 பெண்களுக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 3 பெண்களுக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 276 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 276 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் சென்னை, கோவை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு என மொத்தம் 3 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதேபோல, தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story