ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2,925 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 429 பேருக்கு முதல் தவணையும், 13 ஆயிரத்து 260 பேருக்கு 2-ம் தவணையும், 31 ஆயிரத்து 368 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் 45 ஆயிரத்து 57 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





