அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை


அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 29 Aug 2023 7:30 PM GMT (Updated: 29 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் கச்சேரிமேட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தி குவிண்டால் ரூ.6,296 முதல் ரூ.7,296 வரையும், கொட்டு பருத்தி ரூ.4,219 முதல் 5,426 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.


Next Story