ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 2 ஆயிரத்து 7 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 699-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 909-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 559-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 333-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 890-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரத்து 709-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story