தர்மபுரி மாவட்டத்தில்இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்


தர்மபுரி மாவட்டத்தில்இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 12 May 2023 7:00 PM GMT (Updated: 12 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஏதுவாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமை உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் இன்றைய தினமே தீர்வு காணப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story