தி.மு.க.வினருக்கு 28-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு


தி.மு.க.வினருக்கு 28-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
x

தி.மு.க.வினருக்கு 28-ந்தேதி வரை காவலை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது.

கரூர்

கரூரில் கடந்த மே மாதம் 26-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது தி.மு.க.வினர் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து அவர்கள் வந்த காரை சேதப்படுத்தினர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் மனு அளித்ததையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட மனுவை தொடர்ந்து அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 31-ந்தேதி 15 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கரூர் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன்கோரி மனு அளித்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 15 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து நேற்று கரூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 15 பேருக்கும் வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.


Next Story