கிரிக்கெட் போட்டி


கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 16 April 2023 6:45 PM GMT (Updated: 16 April 2023 6:47 PM GMT)

கல்லல் அருகே உள்ள மரிங்கிப்பட்டியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் அருகே உள்ள மரிங்கிப்பட்டியில் சாதி, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ ஒருமை பாட்டை வலியுறுத்தும் விதமாக 23 வயதிற்குட்பட்டோருக்கான தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை கல்லல் வர்கிஸ் அணியும், 2-வது பரிசை எம்.கே.சி.சி. மரிங்கிப்பட்டி அணியும், 3-வது பரிசை கீழக்கோட்டை அணியும் பெற்றது. இப்போட்டியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன், தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினர். வெற்றி பெற்ற அணியினருக்கு பண தொகுப்பு மற்றும் வெற்றி கோப்பைகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் மற்றும் பிரபு மருத்துவ குழுமங்களின் சேர்மன் துரை கருணாநிதி, வி.ஏ.ஓ. சங்க மாநில பொது செயலாளரும், அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளருமான அருள்ராஜ் ஆகியோர் வழங்கினர்.


Next Story