சுங்க கட்டண பாஸ் விவகாரம்: ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவு


சுங்க கட்டண பாஸ் விவகாரம்: ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவு
x

கோப்புப்படம் 

சுங்க கட்டண பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மதுரை,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறை தான் பயணிக்கவேண்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை கூறியுள்ளது.

எத்தனை முறை பேருந்துகள் கடந்து செல்கின்றதோ, அதற்கு ஏற்றாற்போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, விருதுநகர், திருச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில், கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்க செயலாளர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

அதில், ஐகோர்ட்டு மதுரை கிளையில் சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும், சுங்கச்சாவடிகள் அவற்றை உறுதிப்படுத்தவேண்டும் என்றும், மாத கட்டண சலுகை பாஸ் போன்றவற்றை முறைப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.


Next Story