வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், 2-வது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் கொதிகலன் குழாய் கசிவால் முதல் யூனிட்டின் 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அலகுகளில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story