ஆடி அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Aug 2023 7:30 PM GMT (Updated: 16 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தர்மபுரி எஸ்.வி,. ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வே.முத்தம்பட்டி

வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயா் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக பெங்களூருவில் இருந்து ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஒகேனக்கல்

இதேபோல் குப்புசெட்டிப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், ஒகேனக்கல் ஆஞ்சநேயர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story