விபத்தில் சிக்கிய முதியவர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:
அரூர் அருகே உள்ள சித்தேரி மலை பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 80). இவர் கடந்த 27-ந் தேதி உறவினரை பார்ப்பதற்காக எச்.புதுப்பட்டிக்கு சென்றார். அப்போது சேலம்-அரூர் சாலையில் மூக்காரெட்டிப்பட்டி அரசு பள்ளி முன்பு நடந்து சென்றார். அந்த நேரம் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கட்ராமன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





