காரிமங்கலம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த முதியவர்


காரிமங்கலம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த முதியவர்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள மொளப்பனஅள்ளியை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி, அண்ணன் வீட்டுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை அவர் பூலாம்பட்டி பகுதியில் ஆற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காரிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story