கடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


கடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தர்மபுரி

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 82). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னபாப்பா என்பவரின் கிணற்றில் முதியவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முதியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story