லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி காலனியை சேர்ந்த தொழிலாளி வேல் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். வேல், நேற்று மாலை மொரப்பூர் - காரிமங்கலம் சாலையில் கல்லுக்கடை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது மொரப்பூரில் இருந்து காரிமங்கலம் நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ேபாலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story