தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு


தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு
x
சேலம்

ஓமலூர்

தர்மபுரி மாவட்டம் மஞ்சரஹள்ளி பகுதி சேர்ந்தவர் பொட்டி பெத்தான் (வயது 72). இவர் ஊர் ஊராக சென்று கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து தர்மபுரியை நோக்கி சென்ற வேன் மோதியதில் பொட்டி பெத்தான் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பொட்டி பெத்தான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story