வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x
சேலம்

ஓமலூர்

சேலம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

கட்டிட தொழிலாளி

ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி மானத்தாள் கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (வயது40). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்கின்றன. ராமு அவரது அண்ணன் துரைசாமி வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ரெட்டிப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமு மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் சாவு

சேலம் மணியனூரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் முரளி (வயது 28). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story