ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி புதுஜீவா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 62). இவர் நேற்று மாலை ஆலாபுரம் ஏரி அருகே சென்றார். அப்போது அங்குள்ள ஏரியில் தவறி விழுந்து முதியவர் இறந்தார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





