விபத்தில் ஒருவர் சாவு


விபத்தில் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

ஓசூரில் விபத்தில் ஒருவர் இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சத்யவேலு (வயது 52). இவரும், உறவினர் இளம்வழுதி (44) என்பவரும் மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் ஓசூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த கர்நாடக மாநில அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சத்யவேலு பரிதாபமாக இறந்தார். இளம்வழுதி படுகாயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story