அனல்மின் நிலைய ஊழியர் பலி


அனல்மின் நிலைய ஊழியர் பலி
x

மேட்டூரில் தவறி விழுந்த அனல்மின் நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்

மேட்டூர்

மேட்டூரில் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தவர் சிவசக்தி (வயது 31). இவர், அனல்மின் நிலையம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் அருகில் தவறி விழுந்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிவசக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story