மின்னல் தாக்கி தொழிலாளி சாவு


மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

சிவகங்கை

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரிய கண்ணனூர் கீழகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் அர்ஜுனன் (வயது 55). தொழிலாளி. இவர் கலைக்குளம் கிராம கண்மாயில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இளையான்குடி போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கியதில் அவர் இறந்ததாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story