கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது18). இவர் நேற்று நண்பகளுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றார். அப்போது கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அவர்கள் விரைந்து வந்து வலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் பழக சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





