காட்டுமாடு கன்று சாவு

காட்டுமாடு கன்று இறந்தது
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கீழவண்ணாரிருப்பு அருவி கண்மாய் கரைப்பகுதியில் பிறந்து சுமார் 2 மாதம் ஆன காட்டுமாடு கன்று உடல்நிலை சரியில்லாமல் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த பிரான்மலை வனவர் உதயக்குமார், புழுதிபட்டி கால்நடை உதவி மருத்துவர் கார்த்தி ஆகியோர் வந்து உடல்நிலை சரியில்லாத காட்டு மாடு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் கன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து இறந்து போன காட்டு மாடு கன்றுக்குட்டியை அங்கேயே அடக்கம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





