'நூடுல்ஸ்' சாப்பிட்ட ஆண் குழந்தை சாவு


நூடுல்ஸ் சாப்பிட்ட ஆண் குழந்தை சாவு
x

‘நூடுல்ஸ்’ சாப்பிட்ட ஆண் குழந்தை உயிரிழந்தது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

'நூடுல்ஸ்' சாப்பிட்டான்

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள மருதமுத்து நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சாய்தருண்(வயது 2). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வாமையால் (அலர்ஜி) சாய்தருண் பாதிக்கப்பட்டு, உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி சாய் தருணுக்கு 'நூடுல்ஸ்' சமைத்து கொடுத்துவிட்டு, மீதமிருந்த 'நூடுல்சை' குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 'நூடுல்சை' மகாலட்சுமி சாய்தருணுக்கு சாப்பிட எடுத்து கொடுத்துள்ளார்.

சாவு

அதனை சாப்பிட்ட சாய்தருண் அன்று மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். மேலும் அன்று மாலை சாய்தருண் திடீரென வாந்தி எடுத்து, சுருண்டு கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, சாய்தருணை தூக்கிக்கொண்டு பஸ்சில் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு சாய்தருணை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சாய்தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ஒவ்வாமை ஏற்பட்டு...

ஏற்கனவே ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாய்தருண் துரித உணவான 'நூடுல்சை' உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று ேபாலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story