பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்
நெகமம்
நெகமத்தை அடுத்த வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவருக்கு ஜெயமணி என்ற மகளும், மணித்துரை என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் காளியப்பகவுண்டர் தனது வீட்டை ஜெயமணிக்கு எழுதி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மணித்துரை ஆத்திரம் அடைந்து ெஜயமணியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார் மணித்துரை மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





