விவசாயிக்கு கொலை மிரட்டல்

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 54). விவசாயி. இவரது தம்பி அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன்(50). இவர்கள் இருவருக்கும் இடையே நில பாகப்பிரிவினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜனை, பத்மநாபன் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





