காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர் துரைராஜ், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story