சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பயணிகள் விடுதி முன்பு சனாதன எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாசு தலைமை தாங்கினார். தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கவளவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, எஸ்.டி.பி.ஐ கட்சி நகரச் செயலாளர் முகமது அமீர், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதுகை ஆதவன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் அம்மையப்பன், மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர் பாரதிராஜா, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர், பூர்வீக தமிழர் விடுதலை கட்சித் தலைவர் இசைவாணன், தமிழ் தேசிய புலிகள் படை மாவட்ட செயலாளர் செல்வகணேஷ், பூர்வீக தமிழர் விடுதலை கட்சி தலைவர் இசைவாணன், தமிழ் தமிழர் இயக்கம் மாவட்ட செயலாளர் கதிர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் குட்டி வளவன் நன்றி கூறினார்.


Next Story