விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்புஅரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்புஅரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி
குழித்துறை:
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விளவங்கோடு தாலுகா கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார். நிதித்துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் மங்கள மணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தாலுகா செயலாளர் பிரான்சிஸ் சேவியர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் நிதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிபு உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் சவுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். தாலுகா பொருளாளர் ராஜீவ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story