ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 7:00 AM GMT)

முத்துப்பேட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர்

முத்துப்பேட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட தணிக்கையாளர் தமிழ்சுடர் ஆகியோர் பேசினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story