கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் மெத்தனப்போக்கை கண்டித்தும், நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Related Tags :
Next Story