கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு


கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு
x

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் இரவு நேரங்களில் நடைபெறும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளின் போது இளைஞர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story