2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள மேல்மொழிப்பட்டு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் மேல்மொழிப்பட்டு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதப்படுத்தி வைத்திருந்தது யார்? என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story