கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலையில் உள்ள அத்திப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஒரே இடத்தில் 17 பேரல்களில் 3 ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் அமைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story