கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:45 PM GMT)

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலையில் உள்ள அத்திப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஒரே இடத்தில் 17 பேரல்களில் 3 ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் அமைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story