3500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


3500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:47 PM GMT)

கல்வராயன்மலையில் 3500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கரியாலூர் தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் குரும்பாலூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3500 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story