கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நத்தம்பள்ளி வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அங்கு சாராய ஊறல் அமைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





