வளர்ச்சி திட்டப் பணிகளைஅரசு முதன்மை செயலாளர் ஆய்வு


வளர்ச்சி திட்டப் பணிகளைஅரசு முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:45 PM GMT)

தேனியில் வளர்ச்சி திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.

தேனி

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், உத்தமபாளையம் பேரூராட்சியில் மூலதன நிதி திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அதுபோல், அரண்மனைப்புதூர், பூமலைக்குண்டு, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, வீரபாண்டி, தப்புக்குண்டு ஆகிய இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story