வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து சாவு


வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கோயம்புத்தூர்

பேரூர்

பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வெள்ளியங்கிரி கோவில்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை இளங்கோவடிகள் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது.

இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவது வழக்கம். இவர் தனது உறவினர் கண்ணன் மற்றும் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை கோவையை அடுத்த வெள்ளியங்கிரி கோவிலுக்கு வந்தார்.

மயங்கி விழுந்து சாவு

இதையடுத்து அவர் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தனது உறவினர் கண்ணன் மற்றும் நண்பர்களுடன் மலையேற தொடங் கினார். 2-வது மலை ஏறிக்கொண்டிருந்த போது, முருகனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்்பட்டதால் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்து அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து முருகனை உடனடியாக மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர்கள் பரிசோதித்த போது, அடிவாரத்துக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, முருகனின் உடலை பிரேத பரிசோதனைக் காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, உறவினர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story