திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
x

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமீது அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வெளிமாநில, மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் முருகனுக்கு உகந்த விஷேச தினங்களான கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.

சாமி தரிசனம்

கார்த்திகை மாதம் தொடங்கி இருப்பதால் அய்யப்ப சாமிக்கு மாலையிட்ட பக்தர்கள் அதிக அளவு முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குவிந்ததை காணமுடிந்தது. இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள், 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


Next Story