பாம்பு கடித்து விவசாயி சாவு

பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 61). விவசாயி. இவர் பண்டஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையை பார்வையிட சென்றார். அங்கு அவர் நடந்து சென்றபோது சருகில் மறைந்திருந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதனால் வலியால் துடித்த அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சின்னபையன் நேற்று இறந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





