மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி2 பேர் காயம்

சூளகிரி:
சூளகிரி அருகே ஏனுசோனை கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 27). இவரும் வாசு, ஜீவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சூளகிரி- ராயக்கோட்டை சாலையில் உலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து நாகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். வாசு, ஜீவன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





