பரமத்திவேலூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி


பரமத்திவேலூர் அருகே  மொபட்டில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி
x

பரமத்திவேலூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் கந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). பாத்திரம் வியாபாரி. இவர் கடந்த 2-ந் தேதி பரமத்திவேலூர் அருகே கொந்தளம் பகுதியில் பாத்திர வியாபாரம் செய்து விட்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்கவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story