கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலாப்பழ வியாபாரி பலி


கொல்லிமலையில்  மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலாப்பழ வியாபாரி பலி
x

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலாப்பழ வியாபாரி பலியானார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலாப்பழ வியாபாரி பலியானார்.

பலாப்பழ வியாபாரி

கொல்லிமலை ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சி படப்புவளவு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). பலாப்பழ வியாபாரி. இவர் சரக்கு ஆட்டோவில் பலாப்பழம் மற்றும் அன்னாசி பழங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொன்னுசாமி கொல்லிமலையில் உள்ள குழிவளவு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திடீரென அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

விசாரணை

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாழவந்திநாடு போலீசார் பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பொன்னுசாமிக்கு, இந்திராணி (35) என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story