வெப்படை அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு


வெப்படை அருகே  கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு
x

வெப்படை அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

வெப்படை அருேக கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்தார்.

கல்லூரி மாணவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த ரங்கனூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 45). இவருக்கு 3 மகள்கள் இருந்தனர். இதில் 2-வது மகள் ஜெயவர்ஷினி (19) குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயவர்ஷினி வீட்டுக்கு அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக ெதரிகிறது. இதனால் மயங்கிய அவர் வயலில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

விசாரணை

இதையடுத்து வீட்டில் இருந்து சென்ற மகள் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வயலுக்கு சென்றவர்கள் ஜெயவர்ஷினி அந்த வழியாக சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் வயலுக்கு சென்று தேடியபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவி ெஜயர்வஷியை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சென்ற வெப்படை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story