வெப்படை அருகே வடமாநில இளம்பெண் மர்மசாவு


வெப்படை அருகே  வடமாநில இளம்பெண் மர்மசாவு
x

வெப்படை அருகே வடமாநில இளம்பெண் மர்மசாவு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாத் வயது (45). இவருடைய மகள் மாணிக் பாலிக் (21). இவர்கள் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இதற்காக அவர்கள் உப்புபாளையம் பகுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை குளியலறைக்கு சென்ற மாணிக் பாலிக் பின்னர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாத் மகளுடன் வேலை பார்க்கும் தோழியை அழைத்தார். பின்னர் தோழி குளியலறையில் பார்த்தபோது மாணிக் பாலிக் மயங்கி கிடந்ததை கண்டார்.

இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணிக் பாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெப்படை போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story