கந்தம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு


கந்தம்பாளையம் அருகே  மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு
x

கந்தம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள மூர்த்திபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் தனது மோட்டார்சைக்கிளில் கூடச்சேரி கூட்டுறவு வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story