பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


பாப்பாரப்பட்டி அருகே  கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனங்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசெல்லன் (வயது 80). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் பெரிய செல்லன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்தார்.இந்த நிலையில் பெரிய செல்லனை காணாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்். ஆனால் கிடைக்காததால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் பெரிய செல்லன் உடலை மீட்டனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story