பாலக்கோடு அருகே மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


பாலக்கோடு அருகே  மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

பாலக்கோடு அருகே மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி குப்பன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). இவருடைய உறவினர் வெற்றிவேல் (18). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் பொப்பிடி சின்னக்கா கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அந்தசமயம் நாய் மீது மோதாமல் இருக்க சதீஷ் மோட்டார்சைக்கிளை திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வெற்றிவேலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story