கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு


கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

தர்மபுரி

பாலக்கோடு, அக்:

பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டிகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தகவல் அறிந்து சென்ற பாலக்கோடு போலீசார் எல்லப்பனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story