ஏரியூர் அருகே காவிரி கரையில் மூதாட்டி பிணம் கொலையா? போலீசார் விசாரணை


ஏரியூர் அருகே  காவிரி கரையில் மூதாட்டி பிணம்  கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:46 PM GMT)

ஏரியூர் அருகே காவிரி கரையில் மூதாட்டி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே காவிரி கரையில் மூதாட்டி பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பிணம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை பரிசல்துறை காவிரி கரையோர பகுதியில் ேநற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மீனவர்கள் ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்ேபரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனநலம் பாதிப்பு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் ஏரியூர் பகுதியை சேர்ந்த பாலமுருகனின் தாயார் ருக்மணி (வயது 65) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதித்து அதற்கான சிகிச்சையில் இருந்ததும், நேற்று முன்தினம் முதல் காணாமல் போனதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று அவர் காவிரி ஆற்றங்கரையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story