தேன்கனிக்கோட்டையில் 2 மாத பெண் குழந்தை திடீர் சாவு


தேன்கனிக்கோட்டையில்  2 மாத பெண் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் 2 மாத பெண் குழந்தை திடீர் சாவு

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் நிலோபர் (வயது 26). இவருக்கு 2 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் காலை நிலோபர் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 மாத குழந்தை திடீரென இறந்தது. இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story